தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும்  முன்னேற்றத்துடன்  ஒளிரட்டும். நம்மைச் சுற்றி நேர்மறையின் உணர்வு நிலவட்டும்”, என்று திரு  மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

“தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் ஒளிரட்டும். நம்மைச் சுற்றி நேர்மறையின் உணர்வு நிலவட்டும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *