ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தில் நடைபெறும் யோகப்பயிற்சி நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதுகுறித்து ஐநா சபையின் தலைவர் திரு சாபா கொரோஷி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

“ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் தங்களைக் காண்பதற்கு ஆவலோடு  எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தங்களது பங்கேற்பு இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பானதாக மாற்றும். ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, உலக நாடுகளை யோகப்பயிற்சி ஒருங்கிணைக்கிறது. அதன் காரணமாகவே இந்த யோகப்பயிற்சி உலகளவில் மிகவும் பிரபரலமடைந்து வருகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *